Description |
1993ல் ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தார். 20 வருடங்களாக சங்க பொறுப்பில் இருந்தார். ஈகை குணம் கொண்ட மனித நேயர். தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் கூட உதவி செய்யும் தன்மையானவர். மிகுந்த இசைப்பிரியர். ஆயிரக்கணக்கான மொழிப்பாடல்களை மனப்பாடம் செய்தவர். 1996ல் புஷ்பலதாவுடன் திருமணம். ஆதித்யன் மற்றும் ஆனந்த் என்ற இரு மகன்கள். முதுகுத் தண்டு பிரச்சினையால் 2002 முதல் தாய் சி கற்றுக்கொண்டு தாய் சியை மக்களுக்கு கற்பிக்கிறார். துபாய், டெல்லி, சென்னை, கோவை, சேலம், மதுரை, போன்ற இடங்களுக்குச் சென்று தாய் சி பயிற்சி அளித்துள்ளார். புற்று நோயாளிகள், பக்கவாதம் வந்தவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு தாய் சி பயிற்சி வழியே நிவாரணம் அளித்து வருகிறார். |