Description |
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன் |