Description |
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவுகளாகவும் வடிவம் பெற்றுள்ளது. |