Description |
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின் மீது தன் கருத்துக்களையோ அபிப்ராயங் களையோ திணிக்காமல் அவற்றை உள்ளபடி அவதானித்துப் பதிவு செய்திருப்பது இதன் சிறப்பாகும். |