Description |
ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட இவரது கடுஞ்சமய சீர்திருத்த மனபோக்கைச் சார்ந்ததாகவேயிருந்தது. ஔரங்கசீப்பின் சரித்திரம் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்பட்ட ஒன்றாகவே உள்ளது. |