Description |
இக்கட்டுரைகள் அனைத்தும் நான் கொரியாவில் வாழ்ந்த எட்டு வருடங்களில் எழுதியவை. அதன் தாக்கம் நீங்கள் வாசிக்கும் போது புரியும். நாடு விட்டு நாடு போகும் போது உலகு பற்றிய, நம் தேசம் பற்றிய, நம் இனம் பற்றிய, மொழி பற்றிய புரிதல் விரிவடைந்து அதனதன் உண்மைத்தன்மை விளங்குகிறது. நம்மைப் பற்றிய நம் எண்ணமே மாறுகிறது. பழைய, பிடிவாதமான பற்றுகள் அற்று வீழ்கின்றன. புதிய கற்றல் புதிய மனிதனை நம்முள் உருவாக்குகிறது. அப்படி மாறிய ஒருவனின் எழுத்தே இது. எனவே கொரியத்தொடர்பு பற்றி அதிகம் பேசினாலும், பயணங்கள் தந்த சுவையான அனுபவங்களையும் இந்த நூல் தாங்கி வருகிறது. |