Description |
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது கிச்சுக் கிச்சு. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற்கு மறு வளர்ச்சி கிடையாது. அந்த ஜ்வாலையின் குபீர், அது நித்யத்வத்தின் பொறி. அந்தப் பொறி நேரம் நானும் ஜ்வாலாமுகி. - லா.ச.ரா. |