Description |
ஒரு கிடையினைச் சேர்ந்த மேய்ப்பாளர்களையும் கிடைமாடுகளையும் ஒருங்கே நிர்வகிப்பவர் கீதாரி என்று அழைக்கப்படுகிறார். இவர் கிடையின் நிர்வாகியாக இருந்தாலும் கிடை சார்ந்த அனைத்து வேலைகளையும் சகதொழிலாளியாக நின்று மேற்கொள்பவராக இருக்கிறார். கிடை ஆட்டுக்கீதாரி, கிடை மாட்டுக் கீதாரி என கீதாரிகளில் இருவகையினர் உள்ளனர். இந்நூலில் கிடை ஆட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் பெரி.கபிலனும், கிடை மாட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் க.சி.பழனிக்குமாரும் ஆராய்ந்து எழுதியுள்ளனர். |