Description |
உலக அளவில் இஸ்லாமிய வாழ்வியல் நெறிக்கான பன்முகப் பண்பாட்டுத் தலங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கீழக்கரையும் இடம்பெறும். இறைநேசர்களான சதக்கத்துல்லா அப்பாவும் செய்யிது ஆசியா உம்மாவும் வள்ளல் சீதக்காதியும் தமிழ் மரபுடன் இரண்டறக் கலந்தவர்கள். கீழக்கரையைச் சேர்ந்த ஜனரஞ்சக வரலாற்று ஆளுமை எஸ்.மஹ்மூது நெய்னா இந்த ஊரின் கதையை அழகாய்ச் சொல்லியிருக்கிறார். 1980களில் எம்.இத்ரீஸ் மரைக்காயர் எழுதிய “கீர்த்திமிகும் கீழக்கரை” நூலுக்குப் பின்னர் வெளி வரும் முக்கியமான ஆவணம் இது. இப்போது டாட் காமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். |