Description |
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேர்காணல்கள் தமிழில் வந்து புத்தக உருப்பெறுவது அதிசயத்திலும் அதிசயத்திலும் அதிசயம். இத்தகைய நிகழ்வுகள் பல நிகழ்வது நமது மொழிக்கு மேலும் செழுமையைத்தரும். இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்தி வருபவர் அ. முத்துலிங்கம். நடத்தி வருவது காலச்சுவடு பதிப்பகம். - பி.ஏ. கிருஷ்ணன் |