Description |
பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவும் முரணும் முதன்முறையாக கண்டறியப்பட்டு, கண்டுகொள்ளப்படாதிருந்தவர் அயோத்திதாசர் என்ற வழமையான பார்வையை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. தற்செயலான சுவாரஸ்யம் போல பெயர் சுட்டாமல் மறைபொருளாக பயின்றிருக்கும் இந்த உறவையும் முரணையும் ஒப்பீடுகள், குறியீடுகள், மௌனங்கள் வழியாக புனைவின் நுட்பத்தோடு; அலசுகிறது ஸ்டாலின் ஆய்வு நோக்கு. இந்நூல் அயோத்திதாசரை அவர் கால வரலாற்றில் வைத்து புரிந்து கொள்ள வழிகாட்டுகிறது. |