Description |
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய பாலைநிலவனின் கவிதையுலகம் நுட்பமும் ஆழமும் கூடியது. ஒளிந்துகொண்டிருப்பவனின், தன்னந்தனியனின், சிதலமடைந்தவனின் குரலாகவே வெளிப்படுகின்றன பாலை நிலவனின் கவிதைகள். வாழ்க்கை குறித்தான நம்பிக்கையின் கீற்றுகள் குழந்தைகள், பறவைகளிடம் மட்டுமே துளிர்விடுகின்றன. அவற்றிடமே சுதந்திரத்தையும் ஒளியையும் அவரால் காணமுடிகிறது. விவிலிய நடையின் தாக்கத்துடன் கூடிய தனித்துவமான கவிதை மொழி இவருக்கு வெகு இயல்பாகக் கைகூடியுள்ளது. அது தாய்மையின் கனிவாகவும் சிலபோது பெருவலியின் விம்மலாகவும் கவிதைகளில் வெளிப்படுகிறது. |