Description |
காதலும் காமமும் நுரைத்துப் பொங்கும் வேட்கையின் சொற்களால் ஆனவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். காதலில் கசிந்து உருகியும் வியர்வையோடு வியர்வை கலக்கும் காமத்தில் தகித்தும் ஓர் ஆதிமனம் தன் இணையைக் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகளில். ராஜ்குமாரின் மனவெளியில் பெண் இயற்கையாகிறாள். பனைகள் நிமிர்ந்த சமவெளியாகிறாள். மலைத் தாவரமாகி றாள். பசுமையும் மழையும் வெயிலும் கள்வெறியும் கண்ணீருமாகிறாள். தொன்மனமும் நவீனமுமாகிறாள்.` |