Description |
பாலகணேசன் கனவுகளில் களிக் கூத்து ஆடும் கவிஞன். விடுதலைக்கான நடனம் வேருக்குள் ஒளி பாய்ச்சும் என வலியுறுத்துகிறவர். மெருகேறிய மொழியும் வண்ணங்கள் தூவிக்கிடக்கும் படிமங்களும் புலமும் திணையும் மாறும் அனுபவங்களும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எப்போதுமே விரவிக் கிடக்கிற சோகமும் பாலகணேசனின் கவிதா உலகுக்கு எம்மை ஆற்றுப்படுத்துகின்றன. இலக்கிய சாட்சியங்களின் வலிமைக்கும் வனப்புக்கும் ஈழத் தமிழ் தந்துள்ள இன்னொரு படையல் இக்கவிதைத் தொகுதி. |