Description |
சமகாலத் தமிழ் வாழ்வின் சலனங்களைத் தொன்மமாக்குதல்; தொன்மத்தின் கூறுகளை நிகழ்கால வாழ்வில் பொருள்காண முயற்சித்தல் - இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நவீன இலக்கியப் பரப்பில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் படைப்புச் செயல் இது. யயாதியும் வான்கோவும் தேவகுமாரனும் நவீன மொழிக்குள் ஊடாடுகிறார்கள். கூடவே ஒரு செம்மொழி நாளைய கூற்றாக மாறும் விந்தையும் இந்தக் கவிதைகளில் நிகழ்கிறது. |