Description |
சிட்டி தி.ஜ.ர. வல்லிக்கண்ணன் கு. அழகிரிசாமி சரஸ்வதி விஜய பாஸ்கரன் க.நா.சு. மா.சு. சம்பந்தன் சக்தி வை. கோவிந்தன் ரா.அ. பத்மநாபன் ஜார்ஜ் ஜோசப் இரா. இளவரசு மேற்கண்ட நவீனத் தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கையையும் பணிகளையும் அஞ்சலிகள், அறிமுகங்கள் ஊடாக எடுத்துரைக்கும் கட்டுரை நூல் இது. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’, ‘ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்’ என்பன போன்ற சம்பிரதாயமான இரங்கல் வரி ஒன்றுகூட இடம்பெறாத வித்தியாசமான விமர்சனங்கள் அஞ்சலிகள். நவீனத் தமிழ் வாழ்வுக்கு உரமான சென்ற தலைமுறை ஆளுமை சிலரின் செயல்பாடுகளை நிகழ் சூழலின் மதிப்பீடுகளுடன் வரும் தலைமுறைக்குக் கவனப்படுத்துபவை இந்த அறிமுகங்கள். அஞ்சலிகளும் அறிமுகங்களும் கருணையற்ற காலத்தின் பார்வைகள் அடங்கிய தொனியில் தீவிர விமர்சனத்தைப் பூடகமான சொற்களால் உணர்த்துபவை. |