Description |
ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் கிருஷ்ணன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சான்று. மொழியின் எளிமை எப்போதுமே சிக்கலான பொருட்களை விளக்கத் தடையாக இருந்துவிடாது என்பதை அவரது கட்டுரைகள் காட்டுகின்றன. பயணம், வாழ்க்கை வரலாறு, மனிதர்கள், திரைப்படங்கள் போன்ற பல தளங்களில் இயங்கும் இந்தக் கட்டுரைகள் வாசகர்களை மதித்து தமிழில் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணனின் இருத்தல் அனுபவங்களின் ஒரு வடிகால். |