Description |
மிகு தீவிரத்துக்கும் விளையாட்டுத் தனத்துக்கும் மாறிமாறி பாயும் இழுவிசையின் பறக்கும் சொற்கள் நிரம்பியவை போகனின் கவிதைகள். ஆட்டம் முடிந்தும் கோமாளியின் கண்ணீர்க் காணத் தயங்கி நிற்கும் நெகிழ்மனமும் புவிமீது உயர்வு என்று சொல்லப்பட்ட எதையும் இரக்கமின்றி கேலி செய்யும் கடுமனமும் ஒருசேர போகனிடம் உண்டு. சர்வநிச்சயமாக, இந்தப் பின்னட்டை வாசகங்களைப் பகடி செய்யும் ஒரு கவிதையும் இப்புத்தகத்தின் உள்ளே இருக்கக் கூடும். |