Description |
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’ எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப் பாடல்களின் மொழியில் சென்று சேர்ந்துவிடலாம். |