Description |
‘‘கலைஞரின் முதல் ஆட்சியே தமிழகத்தின் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்த வித்திட்டது. அத்துடன் உணவு, கல்வி, மருத்துவத்தை எல்லோருக்கும் பரவலாக்கி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. இந்தியாவிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் சிறந்த மாநிலமாக இருப்பது தமிழகம்தான். மாநிலத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் துறைகள் மூலமே கிடைக்கின்றது. தனிநபர் வருமானத்திலும் வேலைவாய்ப்பிலும் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகவே இருக்கிறது தமிழகம். இவையெல்லாம் திராவிட ஆட்சி அரசியலின் இடையீட்டால், அதுவும் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கொள்கைகளால்தான் சாத்தியமானது...’’ என்று சான்றுகளுடன் முன்வைக்கிறார் ஜெயரஞ்சன். |