Description |
நவீன கவிதை தன்னைக் கடந்து செல்ல எத்தணிக்கும் தருணங்கள் தமிழிலும் நேர்ந்துவிட்டது.... கவிதைச் சம்பவங்களே கவிதையைத் தாண்டிய ஒரு நிலையில் அனுபவங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. ஒரு மாயமான புரிதலை கவிதை உருவாக்குகிறது என்ற நிலைபோய், மாயமான புரிதலே கவிதையாகவும் கவிதைச் சம்பவங்களாகவும் ஊடாடுவதினூடாக கவிதை என்பது இல்லை ஆனால் கவிதைக்கான வாசிப்பே உண்டு என்ற நிலையை உருவாக்கியிருப்பதுதான்... இந்றைய நிலை. அதுதான் நவீன கவிதையைக் கடக்கும் முயற்சியின் இன்றைய செயற்பாடு. நவீன கவிதை என்ற புரிதல்முறைகளை குழப்பும் பணியில் செயற்படும் இந்த முயற்சியில், ஒருவகைப் பங்களிப்பை வழங்க எத்தணிக்கிறது கடற்கரய் யின் கவிதைப் பிரதிச் செயற்பாடு.. -கண்ணாடிக் கிணறு - தொகுப்பை முன்வைத்து வாசிப்புப் பிரதிகள் அவசியம் என்றே கருதுகிறேன். தொகுதியிலிருந்து சில கவிதைகள் |