Description |
ஒரு கவிஞனுக்குச் சொல் எப்படியோ அப்படித்தான் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு ஒளி. சொல் என்னும்போது மௌனத்தையும் நாம் சேர்த்தே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அப்படித்தான் ஒளி என்பதோடு நிழலையும் நாம் புரிந்துகொள்கிறோம். இளவேனிலின் கவிதைகளை அவரது புகைப் படங்களிலிருந்து பிரித்துப் புரிந்துகொள்வது கடினம். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால் இப்படிச் சொல்லவில்லை. அவரது புகைப்படங்களில் ஏறியிருக்கும் கவித்துவத்தையும், சொற்களில் ஊடுருவியிருக்கும் புகைப்படத்தின் கூறுகளையும் புரிந்துகொண்டதால் இதைக் கூறுகிறேன். முன்னுரையில் ரவிக்குமார் |