Description |
ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதைமொழியிலும் ஓசை யிலும் தொன்மையின் (சிறீணீssவீநீணீறீ) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்ச மும், அடிநாதமாக இவரது கவிதை களில் இழைந்து வருகின்றன. தினசரி வாழ்க்கையின் சாதாரண நிகழ்வு களில் இவரது கவிமனம் புதிய கோணங் களைக் காண்கிறது. அந்த நிகழ்வு களின் பொதுப்பார்வைக்குக் கிட்டாத வேறுபரிமாணங்கள், இவருக்கும், இவர் வழியாக வாசகனுக்கும் கிடைக்க இவரது கவிதை வழி செய்கிறது. ஆனந்த் |