Description |
மாலதி மைத்ரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முதல் மூன்று தொகுதிகளில் இடம்பெற்ற கவிதைகளிலிருந்து பொருளிலும் தொனியிலும் மாறுபட்டவை இதிலுள்ள கவிதைகள். அதே சமயம் முன் கவிதைகளுடன் இழையறாதவை. உரிமை மறுப்புக்கு எதிராக, மானுட இருப்புக்கு ஆதரவாக, வீழ மறுப்பவர்களின் எழுச்சி அரசியலாக உருவங்கொள்ளும் இந்தக் கவிதைகள் சமகாலத்தின் மனச் சான்றாக, அடையாளம்காட்டத் தகுந்தவை. |