இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்துப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை.