Description |
சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் (Frances Harrison) இந்த நூல் சான்றுகளையும் தகவல்களையும் உயிர் தப்பிப் பிழைத்தோரின் அவல அனுபவங்களையும் புரிந்துணர்வுடனும் உணர்வுத் தோழமையுடனும் ஒருசேரத் தருகிறது. Still Counting the Dead எனும் ஆங்கில நூலை இணக்கமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்.கே. மகாலிங்கம். |