Description |
பார்வை குவியும் கூர்மையில் விளையும் உச்சத்தின் தீவிரத்தில் மின்னலெனப் பளிச்சிட்டு மறையும் விதமாகத் தோற்றம் கொள்கின்றன அழகுநிலாவின் கவிதைகள். அந்தக் கணப்பிளவில் மனம் பற்றிவிட வேண்டிய காட்சிச் சித்திரங்களாய் உருவெடுக்கின்றன இவை. நடைமுறை வாழ்க்கையின் எல்லை கடந்து அதற்கப்பால் தலைநீட்டிக் காணும் வினோத பிம்பங்களைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள். |