Description |
ஈழத்தின் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான ஃபஹீமாஜஹானின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல். இந்தக் கவிதைகள் பெண் என்ற உயிரியல் அம்சத்தில் ஊன்றி நின்று ஆணாதிக்கச் சமூகச் சூழலை எதிர்த்து மீறி மானுடப் பெரு வெளியில் விரியும் வேட்கைகொண்டவை. ஒடுக்கு முறைக்கும் போர்க் கொடுமைகளுக்கும் இன அடக்கு முறைக்கும் மதக் கட்டுப்பாட்டுக்கும் எதிரானவை. சமத்துவமான அன்பையும் பாசத்தையும் காதலையும் வேண்டுபவை. |