Description |
அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் ‘குற்றச்சாட்டு X தீர்வு’ என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகிக் கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன |