Description |
அறிவின் ‘குறுக்கீட்டை’ மீறி இயல்பாக ஆச்சரியப்படுவதும் ஆச்சரியங்களைத் தாண்டி அறிவுபூர்வமான விசாரணைகளை மேற்கொள்வதும் அய்யனாருக்குச் சாத்தியமாகியிருப்பதுதான் இந்தப் பதிவுகளின் வெற்றி. சோழமண்டலத்துக் கலைச்சூழலைக் கண்டு மெய்மறந்து நிற்கும் நிலையிலும், அங்கு அடியோட்டமாக நிலவும் பிரச்சினைகளைக் கிரகித்துப் பதிவுசெய்ய அவர் தவறவில்லை. பெரு நகரத்து அடையாளங்களுடன் ஸ்பென்ஸர் பிளாஸா அய்யனாரை மிரளவைத்தாலும் அந்த மாபெரும் வணிகவளாகம் பற்றிய பல அரிய தகவல்களைத் துல்லியமாகத் தர அவரால் முடிந்திருக்கிறது. வியப்பு ததும்பும் இந்த வரிகளினூடே அய்யனார் என்கிற இதழியலாளரின் தகவல் சார்ந்த தேடலின் விளைவுகளும் விரவிக்கிடக்கின்றன. |