Description |
மலையாள எழுத்தாளர் சக்கரியா ‘காலச்சுவ’டில் எழுதிய பத்தியின் தொகுப்பு. மலையாளச் சமூகம் பற்றிய மோகம் தமிழரிடம் உண்டு. இதன் மறுபகுதி தமிழ்ச் சமூகம் பற்றிய தாழ்வு மனப்பான்மை. இந்த மோகத்திலும் தாழ்வுமனப்பான்மையிலும் விடுபட்டுப்போனவற்றைக் கவனப்படுத்துகின்றன இக்கட்டுரைகள். இவற்றோடு நாம் கொள்ளும் கருத்து முரண்பாடுகளையும் தாண்டி ஒரு அறிவுஜீவியின் சுதந்திரமான செயல்பாடு இக் கட்டுரைகளில் வெளிப்படுகின்றதைப் பார்த்து மெச்ச முடிகிறது. சிந்திக்க, முரண்பட, விவாதிக்கத் தூண்டும் நூல் இது. |