Description |
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டு வந்து, இதில் சேர்த்துள்ளார். அத்தனையும் உண்மைக் கதைகள். ஒவ்வொன்றும் நன்கு சிரிக்க வைக்கும் கதைகள். நீங்கள் இவைகளைப் படித்து நன்கு கலகலவெனச் சிரித்து மகிழலாம். இலேசாகச் சிரித்து விடாதீர்கள்; வாய் விட்டுச் சிரியுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு அறிகுறியாகும். |