Description |
தனது சொந்த மண்ணின் நிஜ மனிதர்களை நிழல்களாக இதில் உலவ விட்டிருக்கிறார் கல்கி. ஐந்து தலைமுறைகளுக்கு முந்தைய மாயவரத்தைத்தான் ராயவரமாக மாற்றியிருக்கிறார். கொள்ளையடிக்க வரும் நாளை முன்னதாகவே அறிவித்து விட்டு வரும் தீவட்டி கொள்ளைக்காரர்கள் நிறைந்த பிரதேசமாக இருந்தது கொள்ளிடக்கரை. அந்தக் கள்வர்களைப் பற்றிய கதைகள் இன்றும் அதிஅற்புதமாக உள்ளூர் மக்களால் பேசப்படுகின்றன. கள்வனின் காதலி - நிஜத்தின் நிழல். |