Description |
பெண் சிசுக்கொலையைத் தடுக்க தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டம், இரு பெண் குழந்தைகளுடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அக்குழந்தைகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் என இப்படி எத்தனை சட்டங்களும், நலத்திட்டங்களும் கொண்டு வந்தாலும் இந்த ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சமூகம் நொறுக்கப்படாமல் பெண் கருவையும், சிசுவையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. அத்தகைய சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை பெண்கள் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் முன்னிலும் வீரியத்துடன் முன்னெடுக்க இப்புத்தகம் உத்வேகமளிக்கிறது. பி. சுகந்தி பொதுச் செயலாளர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் |