Description |
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவிலங்கு குறித்த வாசிப்பு இன்பம் நிரம்பிய கட்டுரைத் தொகுப்பு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரான பாராசைட்டுகள் முதல் பெருங் கரடிகள் வரை வந்துபோகும் சுவாரஸ்மான கதைகள், எண்ணற்ற நிகழ்வுகள், ஒன்றைக் காட்டிலும் அடுத்தது அதிகம் சிரித்து மகிழக்கூடியதாக, கீழே வைக்க இயலாத நூல். ராகுல் திராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். |