Description |
காதலும் காமமும் நுரைத்துப் பொங்கும் வேட்கையின் சொற்களால் ஆனவை இந்தக் தொகுப்பிலுள்ள கவிதைகள்.காதலில் கசிந்து உருகியும் வியர்வையோடு வியர்வை கலக்கும் காமத்தில் தகித்தும் ஒர் ஆதிமனம தன் இணையைக் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகளில்.ராஜ்குமாரின் மனவெளியில் பெண் இயற்கையாகிறாள்.பனைகள் நிமிர்ந்த சமவெளியாகிறாள்.மலைத் தாவரமாகிறாள்.பசுமையும் மழையும் வெயிலும் கள்வெறியும் கண்ணீருமாகிறாள்.தொன்மமும் நவீனமாகிறாள்.கொதிக்கும் மனதுக்குள் அத்துமீறி நுழைந்து கிளர்ச்சியூட்டுகின்றன ராஜ்குமாரின் இந்தக் கவிதைகள். |