Description |
சென்னையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் ஒரு இளம் கணிப் பொறியாளர். இது அவரது முதல் நாவல். நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருக்க வேண்டும் என்பதை ஹரிஷ் எழுத்து நடை மறுத்து ஒதுக்குகின்றது. எதார்த்தம் உணர்ந்து எதார்த்தம் தாண்ட முனையும் நாவலின் முதன்மைக் கதாபாத்திரம் போலதான் ஹரிஷ் குணசேகரனும் முயற்சிக்கின்றார். சமகால வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அலுப்பூட்டாத நடையில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒளியோடு எழுதும் எழுத்தாளராக ஹரிஷ் குணசேகரன் உருவாவார். |