Description |
சாம்பைய்யா கிராமத்து மண்ணில் பிறந்தார். மண்ணோடு மண்ணாய் வளர்ந்தார். இயற்கை பாடம் கற்றுத்தந்தது. இந்த பூமி, எழுதும் பலகை ஆனது. ஏர், ஓர் எழுதுகோல். வயலும், வயலைச் சார்ந்த இடங்களும் பாடசாலை. பூமி கற்றுத் தந்ததை மனதில் ஏற்றுச் செயலாக்கிக் காட்டினார். |