Description |
நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதி… இவையெல்லாம் எளிய மனிதர்களை முறைப்படுத்த நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். ஆனால் முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் எவ்வாறு நடக்கின்றன? நேயத்துடனா? வன்முறையுடனா அடியாத மாடு படியாது. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்றெல்லாம் போதனைகள் பரவிக்கிடந்திடும் உலகில் திரும்பும் திசையெல்லாம் அதிகாரம். அங்குலம் அங்குலமாய் வன்முறை. உலகின் இயங்கியல் தத்துவமே அதிகாரமும் வன்முறையும் தானா வாழ்க்கை முழுவதும் துன்பத்தால் ஆட்பட்டு எழுந்து வரும் இந்நாவலின் நாயகன் கவசிநாதன் அதிகாரத்தின் வன்முறைக்கும் ஆட்பட்டு இதுதான் உலக நியதியோ என்று தடுமாறுகிறான். ஆனால் அவன் மனம் அதை ஏற்கவில்லை. அதிகாரத்தையும் வன்முறையையும் எதிர்த்து தொடர் போராட்டங்களை மேற்கொள்கிறான். நீதியை வாஞ்சிக்கிறான். இறுதியாக உலகின் இயங்கியல் தத்துவம் சமத்துவமே என்பதை உணர்ந்துகொள்கிறான். |