Description |
“உங்களைப் போல் (Ungalai Pol) நூலில் கூறியுள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளும் அவர்களின் மனவலி, உடல்வலி, ஏளனங்கள், அனுதாபங்கள்,பொருளாதார சூழல்கள் கடந்து சாதித்ததாகும். இவர்களின் சாதனைகள் சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து,தானும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். “இதுவரை என்று இலக்குகள் வைத்தால் எதுவரை எனினும் எட்டிப்பிடிக்கலாம்” என்ற இவர்களின் எண்ணம் அடுத்தகட்ட முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.வழக்கமாக வாசித்துக் கடந்து செல்லும் வெறும் சடங்காச்சார புத்தகமாக இதை கருதாமல் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளின் செயல்களையும், முயற்சிகளையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.” |