Description |
சி றுவயதிலிருந்தே பெரியார் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை உணர்வாளராகவும், பண்ணையடிமைக் கொடுமைகளைக் கண்ணுற்று அவற்றிற்கெதிரான மனநிலையையும் வளர்த்துக் கொண்டவர். அவர் பணியாற்றிய திராவிட, மார்க்சிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு, விளிம்புநிலை மக்களையும் பெண்களையும் அமைப்பாகத் திரட்டிப் போராடி, வெற்றிகண்டு ‘மக்கள் தலைவராக’ உருவெடுத்தவர். அம்மக்களைக் கொண்ட போராட்டங்கள் வழியே ஆதிக்க அதிகாரங்களை வீழ்த்தி, சுயமரியாதையை உறுதி செய்தவர். இதற்கு பெரியாரியம், மார்க்சியம் ஆகிய கருத்தியல்கள் அவருக்கு ஊன்றுகோல்களாக இருந்தன. |