Description |
“மனிதர்களை சிரிக்க வைத்து பிழைத்துக் கொண்டுள்ள எனக்கும் கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?…”“நோய் என்பது மற்றவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு புற்றுநோயின் ஒரு பிரிவான லிம்போமா வந்திருக்கிறது…” “பெரிய நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்வதுடன் நோயை வெல்வதற்கான முயற்சிகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். சிலருக்குத் தைரியும், சிலருக்குப் பிரார்த்தனை, மற்ற சிலருக்குத் தளராத நம்பிக்கை, எனக்கு பலமாக இருந்தது சிரிப்பு. என் வாழ்க்கையில் மற்ற பல சிரமமான கால கட்டங்களைப் போல் இப்பொழுதும் சிரிப்பைச் சேர்த்துப் பிடிக்க நான் தீர்மானித்தேன்…” |