Description |
முப்பதாண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றம் வந்து விட்டது. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று இரு பெரும் பிரிவுகள் வந்துவிட்டன. சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏழை எளியோருக்கு அரசுப் பள்ளிகள் வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு தனியார் பள்ளிகள். சமூகத்திலுள்ள வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பள்ளிக்கூடங்களிலும் வெளிப்படையாக வந்து விட்டது. இந்தப் பிரிவினை ஒரு விதத்தில் வர்க்க ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்தவும் வலியுறுத்தவும் செய்கிறது. |