Description |
அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து, கட்டுரைகள் வடித்திருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது. – ச.சீ. ராஜகோபாலன் கல்விப் போராளி |