Description |
மனம், மனநலம், மனநோய் மற்றும் மனநல மருத்துவம் குறித்த நவீன அணுகுமுறைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘விதிப்படி’ நோய் வந்த சில வருடங்களில் இறக்கக்கூடிய மனிதர்களை இன்று மாத்திரைகள் மூலம் நூறு ஆண்டுகள்கூட வாழ வைக்க முடியும். இன்சுலின், தைராக்ஸின் போன்ற உயிர்வேதிப் பொருட்கள் இயல்பாக உடலில் சுரக்க வேண்டும். சுரக்காதபட்சத்தில் அந்த உயிர்வேதிப் பொருட்களை ஒரு கோதுமை சைஸ் மாத்திரையில் இன்று விஞ்ஞானம் தயாரித்துவிட்டது. அதே போல், மனநல மருத்துவத்துறையில் உதாரணமாக, மனப்பதற்ற நோய், கூச்ச சுபாவம் கொண்ட ஆளுமை, மனச்சோர்வு, எண்ணச் சுழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட நோயாளிகளுக்கு மூளையில் ஷிமீக்ஷீஷீtஷீஸீவீஸீ எனும் உயிர் வேதிப்பொருள் குறைவாக இருப்பதே காரணம் என நவீன மருத்துவம் கண்டுபிடித்து பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஷிஷிஸிமி என்று சொல்லக்கூடிய ஒரு வகையான மாத்திரைகள் மூலம் மேலே சொன்ன பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். |