Description |
தனக்கென வாழ்ந்திடாமல் சமூகத்திற்கான சிந்தனை நோக்கில் தங்கள் படைப்பாற்றலை விட்டுச் சென்ற நான்கு மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகளின் போற்றத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்து நன்றியுரைக்கிறது இந்நூல். தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தமிழ்ஒளி ஆகியோருக்கு இது நூற்றாண்டுக் காலம் என்பதையொட்டி காலமறிந்து கவனப்படுத்தும் முனைப்பில் இந்நால்வரது இலக்கியச் செயல்பாடுகளை விரிவாகப் பேசுகிறது. அப்படைப்பாளுமைகளின் ஆக்கங்களை மீள்வாசிப்புக்கான கவனப்படுத்தலைச் செய்வதோடு புதிய தலைமுறையினருக்கு அவர்களை அடையாளப்படுத்தும் ஆக்கபூர்வமான பணியையும் சிறப்பாகச் செய்திருக்கிறது. |