Description |
நூல் பெருமை ஜெகத்ஜோதியும், சித்தசமாஜ நிறுவனரு மான சுவாமி சிவானந்த பரமஹம்சர் இந்தியாவில் விசேஷமாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து உலகம் உய்ய நடத்திய சொற்பொழிவு களுடைய சுருக்கமாகும் இந்நூல். சுவாமிகள் முக்கியமாக ஈஸ்வர தத்துவம், குருதத்துவம், ஜீவகாருண்யம், விக்கிரக ஆராதனை முதலிய தத்துவங்களையும், இராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்களின் தத்துவ விளக்கங்களையும், ஆறு ஆதாரங்கள், பேரின்பம் முதலிய விஷயங்கள் தொடர்பாகவும், உபநிடதங்கள் போற்றுகின்ற சத்தான கருத்துக்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழியில் நீடித்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்துள்ளார். அதனுடைய சுருக்கமான குறிப்புகளின் அடிப்படையில் இச்சிறுநூல் வெளியிடப் பட்டுள்ளது.உலக அமைதியும், நலனும் கைகூடுவதற்கு உதவுகின்ற தத்துவ போதனைகளை சுவாமிகள் மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியதன் சுருக்கமான தொகுப்பாகும் இந்த நூல். - உண்மையான ஆன்மீக பாதையில் வாழ்க்கை நடத்திவர விரும்புவோர் அனைவருக்கும் உலகக்ஷேம் பிரகாசிகை என்னும் இச்சிறுநூல் உறுதுணையாவது திண்ணம். |