Description |
தமிழக முகாம்களில் வாழும் தமிழ் அகதிகளின் பேசப்படாத பக்கங்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அ.சி.விஜிதரன் எழுதியுள்ள மரண வீட்டின் முகவரி தமிழ் அகதிகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது எனலாம். முகாம்களில் மனிதர்களை வைத்திருப்பது எத்தனை பெரிய அவலம் என்பதை ஏதிலி, குருதி வழியும் பாடல் நூல்களில் காட்டியுள்ள அவர், இதிலும் அந்த மக்களின் பாடுகளைக் கவிதைகளாக்கியுள்ளார். |