Description |
சித்ரவதையால் பாதிக்கப்பட்டு இருக்கிற நூற்றுக்கணக் கான பெண்கள், மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இரத்தமும். சதையுமாய் உயிருள்ள மாமிச பிண்டங்களாக நியாயம் நக் கேட்டு முறையிட்டு கொண்டு இருக்கிற கொடுமை சொல்ல முடியாத துயரம் ஆகும். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் தோழர் து.ராஜா அவர்களின் இணையர் இந்திய தேசிய மாதர் சங்கத்தின் பொது செயலாளரான ஆனிராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு பலமுறை வந்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசிடம் நேரடியாக விண்ணப்பித்து இருக்கிறார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்க நடவடிக்கை. எடுத்து வருகிறார். சமூக நீதிக்கான ஆட்சி என்று கூறும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த சித்ரவதை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சதாசிவம் கமிஷன் அளித்த அறிக்கை அடிப்படையில் சித்ரவதைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க சிறப்பு புலனாய் விற்கு உத்தரவிட இந்த புத்தகம் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். |