Description |
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது. |